Pages

Tuesday, February 11, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை



08.02.2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்திய முகாமை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுஜா சோய் இண்டஸ்ட்ரீஸ், ரெட்டி பவுண்டேசன், பாரத் எண்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க், ஹோட்டல் தயாளன், ஏர்சி நடேசன் நிறுவனம், கணேசன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. முகாமில், 150க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்வான 30-க்கு மேற்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment