Pages

Tuesday, February 11, 2025

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்






11.02.2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாத சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (12ம் தேதி) மாலை 3 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் சிறப்பு குறைதீர் தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெற வேண்டும், இம்முகாம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை 044-2999 8040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட விவரங்கள் அறியலாம்.




No comments:

Post a Comment