FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, July 6, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்க கோரிக்கை

05.07.2014, மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகையை கூடுதலாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக அத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் விவகாரங்களுக்கான மாநில ஆணையர்கள் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதுள்ள சலுகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதனைப் பரிசீலித்துவருவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருந்தது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அந்த மசோதாவை புதிய நிலைக்குழு பரிசீலனை செய்யும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு நிலைக்குழு அமைக்கப்படும். நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பாக மாநில அரசுகள் தனித் துறை அமைப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment