FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, September 6, 2016

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்: ஏராளமானோர் பங்கேற்பு

05.09.2016, பவானி: பவானியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த, மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்தனர். பவானி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் தலைமையில், சுயம்வரம் நடந்தது. இதில், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஜோடிகளை தேர்வு செய்தனர். இதில், முதலாவதாக பவானி, தாளவாடி பகுதியைச் சேர்ந்த ராஜீ, முதியனூரைச் சேர்ந்த சில்பகுமாரி ஜோடி தேர்வானது. இதேபோல், பலரும் தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர். தேர்வான ஜோடிகளுக்கு வரும், 14ம் தேதியன்று சென்னையில், கீதா பவன் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஜோடிக்கும் தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு கிராம் தங்கம், இரண்டு மாதத்திற்கான மளிகை செலவு மற்றும், 52 வகையான சீர்வரிசையுடன் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment