FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, September 23, 2016

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முற்றுகை

22.09.2016, பென்னாகரம்: மாதாந்திர உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்று கூறி, மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று, பென்னாகரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபப்பை ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில், 56 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு, கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று தங்களின் அடையாள அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த பென்னாகரம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முறையான அனுமதி பெற வேண்டும் என கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கரூரான் கூறியதாவது: உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து, ஆறு மாதத்திற்கும் மேலாகியும் அதிகாரிகள் அதை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதவித்தொகை வழங்க எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிகளான எங்கள் மீது, அதிகாரிகள் இரக்கம் காட்டுவதில்லை. இதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment