FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, November 20, 2016

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் துணைவேந்தர் திறந்து வைத்தார்

20.11.2016
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் பயிற்சி, கணினி மூலம் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தையல் பயிற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரம் கையாளுதல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து துணைவேந்தர் பேசுகையில், "சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காகவே பல்வேறு புதிய பயிற்சி வகுப்புகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பி.சி.ஏ. பட்டதாரி படிப்பு நமது பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கியுள்ளது" என்றார். விழாவில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகள் மைய தலைவர் (பொறுப்பு) பிரபாவதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவருடைய பெற்றோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment