FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, November 15, 2016

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் வாகை சூடிய திருப்பூர் மாணவர்கள்.
14.11.2016, அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான (காதுகேளாதோர்) இளையோர், மிக இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளம், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. தமிழகத்திலிருந்து 70 மாணவ, மாணவியர் அடங்கிய அணி பங்கேற்றது. தமிழக அணியில், திருப்பூரைச் சேர்ந்த 35 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், தடகளம், பூப்பந்து, இறகுப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் ஆடவர், மகளிருக்குத் தனித்தனியாக நடைபெற்றன. இளையோர், மிக இளையோர் பிரிவுகளில் 190 புள்ளிகள் பெற்று தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
திருப்பூரிலிருந்து தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தனி நபர் பிரிவில் 16 தங்கம் உள்பட 24 பதக்கங்களை வென்றனர். மேலும், அணி பிரிவு போட்டிகளிலும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் பங்கேற்ற இம்மாணவர்கள் ரயில் மூலமாக திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களுக்குத் திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் விளையாட்டுச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment