FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 20, 2017

கரவோசையை தன்வசப்படுத்திய காதுகேளாத மாணவர்கள்!

17.02.2017 கோவை:
கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் (மாவட்டம், 324 - பி5) சார்பில், நேற்று நடந்த மாவட்ட அளவிலான காதுகேளாதோர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் கல்லுாரியை சேர்ந்த, 30 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 50 மீ., 100, 200, 400, 800, 4*100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

ஜூனியர் பிரிவில் ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், ராஜவீதி டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் சாதிக் அலி முதலிடமும், காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் விக்னேஸ் மூன்றாம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.அதேபோல், ஜூனியர் பிரிவு பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், காரமடை அரசுப் பள்ளி மாணவி கோபிகா முதலிடமும், மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி மாணவி அப்ரஸ் சாலிகா இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவி சவுபர்னிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.
சூப்பர் சீனியர் பிரிவு ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், சங்கரா கல்லுாரி மாணவர்கள் மார்சல், திலீபன், பாஸ்டின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் சங்கரா கல்லுாரி மாணவியர், தனலட்சுமி, சேன்பியா, பிரியங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்தது. முன்னதாக, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் போட்டிகளை துவக்கி வைத்தார். 

கோவை செசயர் ஹோம்ஸ் செயலாளர் தனலட்சுமி, காதுகேளாதோர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் சுந்தரராஜன், போட்டி நடுவர்களாக ஜி.சி.டி., மாணவர்கள் சக்திவேல், ராஜேஸ்குமார், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment