FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 20, 2017

மும்பையில் தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்- 2017' சாதித்தது செவித்திறன் குறையுடையோர் பள்ளி

18.02.2017, சிவகாசி;
மும்பையில் நடந்த தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்-2017' போட்டியில், சிவகாசி செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை பெற்றனர்.மும்பையில் செவித்திறன் குறையுடையோர் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான 'சைலண்ட் ஒலிம்பிக்-2017' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள காதுகேளாதோர் பள்ளிகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர். சிவகாசி செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 13 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளனர். 

100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் ராக்கப்பன் தங்கம் வென்றார். 11 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் அருள்ராஜ் முதல் இடம், அபிஷேக் குமரன் மற்றும் தினேஷ் செஸ் விளை யாட்டு போட்டியில் முதல் இடம், பெண்கள் பிரிவில் லெமன் ஸ்பூன் போட்டியில் கோகிலாதேவி முதல் இடம் பெற்றனர். தனலெட்சுமி 200 மீ., நீளம் தாண்டுதல், தொடரோட்டப் போட்டிகளில் மூன்று தங்கம் வென்றார். 

தொடரோட்டத்தில் தர்ஷினி, முத்துமாரி, மாரிச்செல்வி, தனலெட்சுமி தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாலமோன், தலைமை ஆசிரியர் பால்ராஜ் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், பரிபூரணம் ,ஆசிரியர்கள் ஆபிரகாம், அன்புஜோதிமணி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். விடுதி காப்பாளர் எஸ்தர் கஸ்துாரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment