FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, May 18, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி வேடங்களுக்கு போட்டி போடும் ஹீரோ – ஹீரோயின்

17.05.2017
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் உள்பட பலர் மாற்றுத்திறனாளிகளாக நடித்தால் அதனை ஆவலுடன் பார்ப்பார்கள். அதன் பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் யாரும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயின்கள் மாற்றுத்திறனாளி வேடத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கின்றனர். அந்தவகையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா காது கேளாதவராக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து கொலையுதிர் காலம் படத்திலும், காது கேளாத, வாய் பேச முடியாத ஹீரோயினாக நடிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பிருந்தாவனம் படத்தில் காது கேளாதவர் வேடத்தில் அருள் நிதி நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இளம் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இதுபோன்ற மாற்றுத்திறனாளி வேடங்கள் கொண்ட கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களை தொந்தரவு செய்கிறார்களாம்.

No comments:

Post a Comment