FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, May 11, 2017

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்: அதிகாரிகள் விசாரணை



கோவை: திருப்பூர் அருகே உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தனி அறையில் மாணவிகளிடம் அதிகாரிகள் புதன்கிழமை (இன்று) விசாரணை நடத்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி.



மாற்றுத்திறனாளியான முருகசாமி பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

மேலும், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தகாவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் முருகசாமியையும், அவருக்கு கருவை கலைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி நிர்வாகிகள் சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகியோரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இராணி என்பவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கோதபாளையம் பகுதியில் உள்ள முருகசாமிக்கு சொந்தமான காதுகேளாதோர் பள்ளியில் சூலூர் வட்டாச்சியர் பழனி மற்றும் கருமத்தம்பட்டி விஏஒ முருகேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாச்சியர் பழனி:

புகார் குறித்த முதற்கட்ட விசாரணையை துவக்கி இருக்கிறோம். புகார் உறுதி செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை தொடர்ந்து கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தனி அறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தூடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சைகை மொழியில் மாணவிகள் கூறிய கருத்துக்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர்:

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment