FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, October 29, 2021

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் காதுகேளாத பேசாத வாலிபர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அக்ராகார நாட்டா மங்கலம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த கோடி மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் கொத்தனார் வேலை செய்யும் கூலி தொழிலாளியான இவர் வாய்பேச முடியாது, காது, கேட்காது ஊமையாக உள்ள மணிகண்டன் 3-ம் தேதி இரவு குள்ளம்பட்டி அருகே தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அரசு மதுபான கடையிலிருந்து மதுபாட்டில் வாங்கிகொண்டு அவ்வழியாக குளிப்பட்டி பள்ளக்காடு அருணாசலம், திருமலை ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களிடம் லிப்ட் கேட்டு சாடை செய்த மணிகண்டனை அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது குள்ளம்பட்டி அருகே உள்ள ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள், மது அருந்த மரத்துக்கு அடியில் அமர்ந்துள்ளனர். அதற்கு பின்னர் மணிகண்டனை ஓரினசேர்க்கைக்கு இருவரும் அழைத்துள்ளனர். ஆனால் மறுத்ததால் மணிகண்டன் மேல் போட்டிருந்த துணிகளை அவிழ்த்துவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடும் போது மணிகண்டன் ஒத்துழைக்காததால், ஆவேசமடைந்த அருணாச்சலமும், திருமலையும் மதுபாட்டில், கல்லால் குத்தி தலையிலும் வயிற்றிலும் அடித்து நிர்வாண நிலையில் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் மூலமாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸார் தேடி வரும் திருமலை கடந்த ஆண்டு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment