FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, November 2, 2021

TNPSC, SSC போட்டி தேர்வுகள்…. அக்டோபர் 20 முதல் இலவச பயிற்சி…. அதிரடி அறிவிப்பு….!!!!


16.10.2021
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு அரசு பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆனால் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க படாததால் அவர்களது உழைப்பும் முயற்சியும் வீணாகி விடுகின்றது.

மேலும் தற்போது நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் முதல் நிலை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் முறையான பயிற்சி இல்லாததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர் இந்திய அளவில் 750 வது இடத்தைப் பெற்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வில் தமிழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்றுவிப்பாளர் மற்றும் மருத்துவ பொறியாளர் ஆகிய பணிகளுக்கு 3,261 பணியிடங்களை நிரப்புவதற்காக எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தத் தேர்வுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி முதல் எஸ்எஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் சென்று பார்க்கவும் அல்லது 0436-6224226 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்காக இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் தங்கள் விவரங்களை பதிவு செய்து அதில் பதிவேற்றம் செய்துள்ள பாட குறிப்புகள் மாதிரி வினாக்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-Seithi Solai


No comments:

Post a Comment