FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, May 1, 2015

செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி



30.04.2015, சென்னை
பிளஸ் 2 முடித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி, கணினிப் பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலை- பயிற்சித் துறை, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் தொடர்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் துணை இயக்குநர் ஜி.தங்கராஜ் கூறியதாவது:

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடரும்போது ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும் தடுமாறுகின்றனர். அதேபோல கணினி மென்பொருள் தொடர்பானத் தகவல்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆங்கில மொழி உச்சரிப்பு, இலக்கணம், கணினி குறித்த அடிப்படைப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு பிரிவுக்கு ("பேட்ச்') 25 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

90 சதவீத வேலைவாய்ப்பு: இதுதவிர தட்டெழுத்து, கணினி, மின்சாதனப் பொருள்கள் பழுது பார்த்தல், தையல் பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங் உள்பட 8 வகையான பயிற்சிகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவர்களில் 90 சதவீதம் பேர் பிபிஓ துறை உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் தாங்கள் மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றுடன் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

முன்னதாக உயர்தர மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் கயித்தமலை, தகவல் பரிமாற்றம், கணினி அடிப்படைப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment