FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, May 8, 2015

தாலி, தங்கத்துடன் திருமண நிதியுதவி

சென்னை, மே 8: 67 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன்ரூ.26.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (07.07.2015), சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு 67 பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேசாத, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி கா சோலைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் 4 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்

சக்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் சின்னையா (எ) ஆறுமுகம், டி.சிவராஜ், நுங்கை மாறன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மின், மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஆர்.ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 comment: