FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, July 26, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி முகாம்

26.07.2017, ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான இரண்டு மாத இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 10:00 மணிக்கு, செங்கோடம்பள்ளம், திண்டலில் உள்ள குருசாமி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. எம்.எஸ்., ஆபீஸ், இன்டெர்நெட், டைப் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆளுமை மேம்பாடு, சில்லறை வர்த்தகம் குறித்து இலவச பயிற்சி வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்கள், 18 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர், பார்வை குறைபாடு உடையோர் பங்கேற்கலாம். கல்வி தகுதி சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல், நான்கு போட்டோ கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பித்து தேர்வு பெறுவோருக்கு, 'யூத் பார் ஜாப், 65/111 பிக் பஜார் தெரு, கோவை - 641 001' என்ற விலாசத்தில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது தங்குமிடம், உணவு இலவசம். இதை கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment