FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, July 14, 2017

சிறையில் கணவர்... வாய் பேச முடியாத, காது கேட்காத கர்ப்பிணி பெண்..! கதிராமங்கலம் சோகம்

14.07.2017
பாசப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி, கறுப்புக்கொடி போராட்டம் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது கதிராமங்கலம். இது ஒருபுறமிருக்க, கடந்த 30-ம் தேதி இங்கு நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறையின்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினர், மனக்குமுறலோடு பாசப்போராட்டத்தில் தவித்துவருகிறார்கள். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர், ஜெயராமன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த விடுதலைச் சுடர், ரமேஷ், சிலம்பரசன், முருகன், வெங்கட்ராமன், தர்மராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் தவித்துவருகின்றன. இவர்களில், ரமேஷின் குடும்பச் சூழல் மிகவும் பரிதாபமாக உள்ளது. கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில் வறுமையோடு தோற்றமளிக்கிறது ரமேஷின் சின்னஞ்சிறு ஓட்டு வீடு. கூலித் தொழிலாளியான ரமேஷூக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. வாய் பேச முடியாத, காது கேட்காத நிறைமாத கர்ப்பிணியான கவிதா, தனது மனக்குமுறலை வார்த்தைகளால் கொட்ட முடியாத நிலையில் கண்ணீரைக் கொட்டித் தீர்க்கிறார். கணவர் ரமேஷ் சிறை சென்றதிலிருந்து சரியாக உணவருந்தாமல், தூக்கமில்லாமல் கவிதாவின் உடல் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக கவலைதெரிவிக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள். ''கவிதாவின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும்தான் பொறுப்பாவார்கள். அப்படி ஏதேனும் நடந்தால், ஒட்டுமொத்த கதிராமங்கலமும் கிளர்ந்தெழும்'' என எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறையில் வாடும் சிலம்பரசனின் குடும்பம், தற்போது அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டட கூலித் தொழிலாளியான சிலம்பரசனின் சொற்ப வருமானத்தில்தான் அன்றாட வாழ்க்கை கடந்திருக்கிறது. சிறையிலிருக்கும் மற்றொரு நபரான முருகனை, சிறையில் சென்று சந்திக்க மன தைரியம் இல்லாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல் பெரும் ஆற்றாமையோடு தவித்துவருகிறார் இவரது மனைவி. காரணம், இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையிடம் முருகனுக்கு பாசம் அதிகம். 10 நாள்களுக்கும் மேலாக அப்பாவைப் பார்க்காமல் ஏக்கத்தில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. கணவரைப் பார்க்க, சிறைச்சாலைக்கு குழந்தையை அழைத்துச் செல்லவும் மனமில்லை. தனியாகப் போய்ப் பார்க்க மனம் இல்லை. இப்படியாக, கண்ணீரோடு கடந்துகொண்டிருக்கிறது, இவர்களின் அன்றாடப் பொழுதுகள்.

No comments:

Post a Comment