FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, September 13, 2025

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது! ஒடிஸா வாய்பேச முடியாத இளைஞர் கைது!




12.09.2025
கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து திருடுபோன அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மீட்கப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற ஒடிஸா மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சென்னை-திருப்பதி செல்லும் பேருந்து கோயம்பேடு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தை எடுப்பதற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வியாழக்கிழமை காலை அங்கு சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பேருந்தை காணவில்லை.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளையின் மேலாளர் ராம்சிங் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது, பேருந்தின் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து இருக்கும் இடத்தை ஆய்வுசெய்தபோது, ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற கோயம்பேடு போலீஸார், நெல்லூர் காவல்துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நெல்லூர் அத்மகூர் என்ற இடத்திலிருந்து பேருந்தை மீட்டனர். மேலும், பேருந்தை திருடிச் சென்ற ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஞானசஞ்சன் சாஹூ (24) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment