FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, August 4, 2025

காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்களுக்கு விதைப்பந்துகள் தயாரிக்கும் சிறப்புப் பயிற்சி முகாம்



22.07.2025
பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் மேல்நிலைப் பள்ளியில், காடுகளை உருவாக்கும் அரிய நோக்குடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜான்சி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பள்ளித் தாளாளர் ஜேக்கப், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி, மற்றும் ஹெலன்ஜாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஹரிஹர செல்வன், பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன், "ஒரு கோடி விதைப்பந்துகள் உருவாக்கும்" இலக்குடன் செயல்பட்டு வருகிறார். அவர் மாணவர்களுக்கு, விதைப்பந்துகளை எப்படித் தயாரிக்க வேண்டும், அதன் அவசியம் என்ன, மற்றும் காடு வளர்ப்பில் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். திருமாறனின் உரையை, சைகை மொழி பெயர்ப்பாளர் சுபா, மாணவ, மாணவிகளுக்குப் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்த்து, அவர்களும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவினார்.

இந்தச் சிறப்பான நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் எனப் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பசுமைப் படை பொறுப்பாசிரியை பாலின்ஜோன்ஸ் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்திருந்தார்.

காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் காடு வளர்ப்பு போன்ற சமூகப் பொறுப்புமிக்கப் பணிகளில் ஆர்வம் காட்டியது, எதிர்காலச் சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

No comments:

Post a Comment