FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 31, 2013

மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்




மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலக  அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே... மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும்.  சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும்.?
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம்  குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். நாற்பது சதவீதத்துக்கும் கீழ் மாற்று திறனாளியாக இருப்பவருக்கும் ஓட்டுனர் உரிமம்  வழங்குவதில் சில விதிகள் உண்டு.
முதலில் அவர் வாகனத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்பு ஓட்டிக்காட்ட வேண்டும். சிக்னல் அல்லது வாகனத்தை நிறுத்த வேண்டி  வந்தால், அவரால் கால் ஊன்றி பேலன்ஸ் செய்து நிற்க முடிகிறதா? வாகனத்தின் எடையை அவரால் தாங்கிக்கொள்ள முடிகிறதா?  என்பதற்காகத்தான் இந்த டெஸ்ட்டுகள். இந்த டெஸ்ட்டுகளில் பாஸ் ஆன பின்புதான் பழகுனர் உரிமம் வழங்கப்படும். இந்த விதிமுறைகள் நான்கு  சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
நாற்பது சதவீதத்துக்கு மேல் குறைபாடுகள் உள்ள மாற்றுதிறனாளிகள், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட விரும்பினால்,  அராய் (ஏ.ஆர்.ஏ.ஐ) அனுமதி வாங்கிய நிறுவனங்களில், அவர்கள் சுலபமாக வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றதுபோல எளிமையாக மாற்றங்கள் செய்து  கொண்டுவர வேண்டும். அப்படி மாற்றி அமைத்த வாகனங்களில் கூடுதலாக ஏதாவது பாகம் அவர்கள் வசதிக்காக சேர்த்து இருக்கலாமே தவிர,  வாகனத்தில் உள்ள எந்த பாகத்தையும் நீக்கி இருக்கக்கூடாது.
இரண்டு சக்கர வாகனங்களை அராய் அனுமதி அல்லாமல், வேறு எங்காவது மெக்கானிக் செட்டில் மாற்றி அமைத்து வந்தால், கண்டிப்பாக  அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. அராய் அனுமதி வாங்கிய எந்த நிறுவனம் வாகனத்தை மாற்றி அமைத்ததோ அந்த நிறுவனத்திடம்  சான்றிதழ் பெற்று வருவது அவசியம். வாகனம் வாங்கும்போதே மாற்றுத்திறனாளியின் பெயரில்தான் வாங்கி இருக்க வேண்டும். லைசென்ஸ்  கொடுக்கும்போது வாகனத்தின் எண் குறிப்பிட்டுத்தான் லைசென்ஸ் வழங்கப்படும்.
அந்த வாகனத்தை தவிர, வேறு வாகனத்தை அவர்கள் ஓட்டக்கூடாது. மாற்றுத்திறனாளியின் கை, கால்களில் எந்த குறைபாடுகளும் இல்லாமல், காது  மட்டும் கேட்காமல் இருந்தாலும் லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. ஆனால், கருவி பொருத்தினால் கேட்கும் திறன் இருக்கும் என்றால்,  அவர்களுக்கும் சில சோதனைகள் செய்தபின்பு லைசென்ஸ் வழங்கப்படும். லைசென்ஸில் இவர்கள் காது கேட்கும் கருவி பொருத்தியவர் என்பதும்  குறிப்பிடப்படும்.

No comments:

Post a Comment