FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, July 12, 2013

சேமிப்பு பணத்தில் இருந்து காது கேளாத மாணவிகளுக்கு உதவிய பிச்சைக்காரர்: புத்தாடை வாங்கி கொடுத்தார்

பிச்சைக்காரர்கள்தான் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிச்சைக்காரரே மற்றவருக்கு உதவிய சம்பவம் அகமதாபாத்தில் நடந்து உள்ளது.

இந்த ஊரை சேர்ந்த பிரஜாபதி (வயது 64) என்ற பிச்சைக்காரர் தினமும் அங்குள்ள ஜெயின் கோயில் முன்பு நின்று பிச்சை எடுப்பார். அதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் காது கேளாத, வாய்பேசாத ஏழை மாணவி கள் படிக்கும் பள்ளிக் கூடம் இருந்தது. அவர்களுக்கு உதவ விரும்பினார். அவர் ரூ.3 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்துடன் சென்று பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து பேசினார்.

அவர்கள் மாணவி களுக்கு புத்தாடை எடுத்து கொடுக்கும்படிகூறினார் கள். அதன்படி 11 மாணவி களுக்கு அவர் புத்தாடை எடுத்து கொடுத்தார்.

இது பற்றி பிரஜாபதி கூறியதாவது:-

பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் 2 வேளை மட்டும் சாப்பிடுவேன். ஒரு பகுதி பணத்தை சொந்த ஊர் ராஜ்கோட்டில் நோயுற்று இருக்கும் எனது மனைவிக்கு அனுப்பி வைப்பேன்.

மீதி பணத்தை வைத்து ஏழைகளுக்கும் பசியால் இருப்பவர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பேன்.

காது கேளாத பள்ளி மாணவிகளுக்கும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். எனவே ரூ.3 ஆயிரம் சேமித்து அவர் களுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Tamil Oli

No comments:

Post a Comment