FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, February 12, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் தொடர்பான வழக்கு: விளக்கம் அளிக்க தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

சென்னை, 12 February 2014

அரசின் பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அரசு அதிகாரிகள் அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: அரசுத் துறை பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி, அரசு துறைகள், பொதுத் துறைகள், அரசு நிர்வகிக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி, பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தப் பணியிடங்களை கண்டறிவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதன் பிறகு, இந்தப் பணியிடங்களை கண்டறிவதற்காக மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில் 34 செயலக தலைவர்கள், 140 துறை தலைவர்கள், 102 அரசு பொதுத்துறை பணியிடங்கள், 54 அரசு நிறுவனங்களில் பதவிகள் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் கண்டறியப்பட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கான எந்த ஒரு தெளிவான தகவலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிர்வகிக்கும் 54 நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை.

அதனால் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் பி.சிவசங்கரன், ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனவே, இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இதற்கான நோட்டீûஸ பதிவுத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment