FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, November 13, 2014

மாற்று திறனாளி பெண்ணிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டருக்கு ரூ. 27000 அபராதம்

 08.11.2014, விழுப்புரம்:
அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த நடத்துனர் மாற்றுத்திறனாளிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் அருகே ஆசூரை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ராஜேஸ்வரி (21), மாற்றுத் திறனாளி. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி அருகே அரியூரைச் சேர்ந்த சம்பத் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் ஏறியதும் ராஜேஸ்வரி தனக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த நடத்துனர் இப்பேருந்தில் முழுகட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறி திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்ல மொத்த கட்டணத்தொகை ரூ.198ஐ வசூலித்துள்ளார். ஆனால் அரசாணைப்படி மாற்றுத்திறனாயிளிடம் நான்கில் ஒரு பங்காக ரூ.49.50 பைசா வசூலிக்க வேண்டும். ஆரசாணையை மீறி கூடுதலாக ரூ.148.50 வசூலித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வக்கீல் மூலம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் சக பயணிகள் முன்னிலையில் இழிவாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக அந்த மனுவில் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார்.

அதில் நடத்துனர் சம்பத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் ராஜேஸ்வரிக்கு வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.148.50 பைசாவையும் இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்துனர் சம்பத்தின் மாத சம்பளத்தில் பிடித்து ராஜேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment