FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, July 24, 2015

ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் 53%

23.07.2015, புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் விவரங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் 53 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வு என வர்ணிக்கப்படும் ஐஏஎஸ் (சிவில் சர்வீசஸ்) தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 1,236 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடந்தது. இதற்காக 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், 4.5 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16,933 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இருந்து 3,308 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,236 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், யுபிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதன்படி, முதலிடத்தை பிடித்த மாற்றுத் திறனாளி (பெண்) இரா சிங்கால் (டெல்லி), 2,025க்கு 1,082 (53.43%) மதிப்பெண்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ரேனு ராஜ் (கேரளா) 1,056 (52.14%) மதிப்பெண்களையும், 3ம் இடம் பிடித்த நிதி குப்தா (டெல்லி) 1,025 (50.61%) மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment