FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, December 21, 2015

எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி வேலை 700 பணியிடங்கள்

எல்.ஐ.சி. யில் ‘அசிஸ்டண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர்’ பணிக்கு 700 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:–

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா’ சுருக்கமாக எல்.ஐ.சி. என்றழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ‘அசிஸ்டண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர்’ பணியிடங்களுக்கு மொத்தம் 700 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் எஸ்.சி. பிரிவினருக்கு 106 பணியிடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 53 பணியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 192 பணியிடங்களும், பொது பிரிவினருக்கு 349 இடங்களும் உள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான 21 இடங்களும் அடக்கம்.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே...

வயதுத்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 1–12–2015–ந் தேதியில் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2–12–1985 மற்றும் 1–12–1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணைய வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

கட்டணம்:

கட்டணமாக எஸ்.சி./ எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூபாய் 100–ம், இதர பிரிவினர் 600–ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை வழியாக மட்டுமே செலுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 5–1–2016–ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.licindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment: