FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, December 7, 2015

நெல்லை மாவட்டத்தில் 49,999 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளி அட்டை: ஆட்சியர்

05.12.2015, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 49,999 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுத் திறனாளிகள் செயல்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.500 வழங்கி வந்ததை தமிழக முதல்வர் ஜெயலிலதா ரூ. 1,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை மூலம் 16 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர 49,999 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளில் 3 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறு. தனியார் துறைகளிலும் இத்தகைய ஒதுக்கீட்டை உறுதி செய்து வருகிறது. இந்த வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 10 பேருக்கு ரூ.5.57 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு நவீன காதொலிக் கருவிகள், 5 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு முடநீக்கு சாதனம் என மொத்தம் 41 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், எம்எல்ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ். துரையப்பா, முத்துச்செல்வி, மேயர் இ. புவனேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அமர் சேவா சங்கச் செயலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment