FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, December 12, 2015

ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாற்றுத் திறனாளி தம்பதி போராட்டம்

கோவை,11 December 2015
ஆவின் பாலகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி தம்பதி ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சந்தியா. இவரும் மாற்றுத் திறனாளியாவார். மாரியப்பன் ரெயின்போ பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஒயர் கூடை, நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் வேலை செய்து வந்தார்.

சாலையோரக் கடைகளை அகற்றும்போது வேலை வாய்ப்பை இழந்த மாரியப்பன், ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரது மனுவை ஆவின் அதிகாரிகள் ஏற்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரியப்பன், அவரது சந்தியா, மகன் ரியாந்த் ஆகியோருடன் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆவின் தலைவர் டி.தாமோதரன், பொது மேலாளர் கே.சுமதி ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினரின் அனுமதியைப் பெற்று வந்தால் அவரது மனுவை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மாரியப்பன் தம்பதி போராட்டத்தைக் கைவிட்டனர்.

No comments:

Post a Comment