FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, December 12, 2015

ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, டிச. 10–
சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்த மாணவ–மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தன. எம்.ஜி.ஆர். கைப்பட எழுதிய 10 டைரிகள், பயன்படுத்திய கிராமபோன் மற்றும் விருதுகள், கேடயங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி இருந்தது.

இந்த பொருட்கள் அனைத்தும் நினைவு இல்லத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும் சேதம் அடைந்து இருந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு 20 அடி உயரத்தில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சீரமைப்பு பணி குறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறும் போது, ‘‘நினைவு இல்லத்தையொட்டி நடைபெறும் சாலை விரிவாக்கப்பணியை விரைவாக முடித்து அங்கு பெரிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். வருகிற ஜனவரி 17–ந்தேதி எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் ஆகும். இந்த நேரத்தில் இப்படி நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக காதுகேளாதோர் பள்ளியில் இருந்த குழந்தைகளை நானும், எனது நண்பர் ஒருவரும் தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றி மொட்டைமாடிக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். இதற்காக அவர்களது காலில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment