FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, April 3, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கு கணினி தொழில்திறன் பயிற்சி B


01.04.2016, சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி தொழில் திறன் பயிற்சியின் தொடக்க விழாவை வியாழக்கிழமை நடத்தின.

கிரீடு தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பையன் வரவேற்றார். தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி தலைமை வகித்தார்.

அவர் பேசியது: கிரீடு தொண்டு நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.


சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் (சஐஉடஙஈ) சார்பில், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச கணினி தொழில் திறன் பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றார்.

முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment