FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, June 26, 2016

பெற்றோரைத் தேட ரயில் பயணம்: வாய் பேச முடியாத கீதா விருப்பம்

 26.06.2016, பாகிஸ்தானில் இருந்து தாயகமான இந்தியா திரும்பிய வாய் பேசமுடியாத, காது கேளாத இளம்பெண் கீதா, பெற்றோரிடம் இருந்து பிரிந்த ரயில் நிலையத்தைக் கண்டறிந்து தனது பெற்றோரைத் தேடவுள்ளார்.
அவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சம்ஜெüதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் என்று கருதப்படுகிறது. பெற்றோரிடம் இருந்து பிரிந்த கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டு, "எதி' அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.
அண்மையில் "பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாகிஸ்தான் சிறுமி ஒருவரை, அவரது தாயுடன் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் காட்சியைப் போல் கீதாவும், இந்தியாவில் உள்ள தன் பெற்றோருடன் இணைய விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
பின்னர் அலுவலக ரீதியிலான நடைமுறைகள் முடிவடைந்தவுடன் கீதா கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள காது கேளாத- வாய் பேச முடியாதவர்களுக்கான காப்பகத்தில் கீதா தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக தான் ரயில் பயணம் மேற்கொள்ளவுள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பும்போது கல்வியறிவு இல்லாத பெண்ணாக இருந்த கீதா, தற்போது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்று வருகிறார்.

No comments:

Post a Comment