FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, January 6, 2017

4000 திருமணங்களை நடத்தி வைத்த தனி ஒருவன்..!

01.01.2017
தனி ஒருவராக இருந்து சுமார் 4000 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர்,பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.பொது சேவைகளில் நாட்டம் உள்ள இவர்,கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் காது கேளாதோருக்கு இடையே சுமார் 4000 திருமணங்களை தன் சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார்.

திருமண செலவுகளுக்கு பணம் வேண்டும் என்பதற்காகவே,தனது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி,சொந்த பங்களாவை விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 2000-ஆம் ஆண்டு காது கேளாதோருக்காக சுயம்வரா என்ற அறக்கட்டளையை தொடங்கிய இவர்,தற்போது ஏழ்மையில் உள்ள காதுகேளாதோர் படிப்பதற்காக தனது அறக்கட்டளை மூலம் பள்ளி ஒன்றையும் துவங்கியுள்ளார்.

“நான் திருமணம் செய்து வைத்த அனைவருமே எனது மகன்,மகள் தான்.அப்படி பார்த்தால் எனக்கு கிட்டத்தட்ட 8,000 பிள்ளைகள்.நான் திருமணம் செய்து வைத்த அனைவரும் என்னை அப்பா எனவும்,அவர்களுடைய குழந்தைகள் தாத்தா எனவும் தான் அழைப்பார்கள்.இதைப் பார்த்து என் மகன் கூட பொறாமைப்படுவான்.”என்கிறார் விஜயராஜ்.

அவருடைய இந்த பொதுச் சேவைக்கு அவருடைய மனைவி பக்கபலமாக இருந்து வருகிறாராம்.


No comments:

Post a Comment