FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Thursday, June 29, 2017

மாற்றுத் திறனாளிகளின் 'சைகை' ஆர்ப்பாட்டம்

29.06.2017, பழநி, பழநியில் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் வழங்ககோரிக்கை 'சைகை' முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, வாய்பேச, காதுகேளாதோர் சங்க கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாதன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர்.
2, 4 சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்பேச இயலாத, காதுகேளாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னரும் வழங்காமல் உள்ளனர். உடனடியாக ஓட்டுனர் உரிமம் வழங்கவேண்டும் என, வலியுறுத்தி 'சைகை' முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment