FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, December 27, 2017

காது கேளாத, வாய் பேசாத 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை! அரசு மருத்துவர்கள் சாதனை

27.12.2017
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஆடியோ வெர்பெல் தெரப்பி எனும் காக்ளியர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பேச்சுப் பயிற்சிக்கான முறை கொண்டுவரப்பட்டது. அரசு மருத்துவமனையிலையே வயதுவரம்பு அரசு காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், “தென் தமிழகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலே முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் 7 லட்சம் பெறுமான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போதுவரை 61 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது . இதுவரை 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு இன்று நல்ல முறையில் காது கேட்கவும் பேசிக் கொண்டும் உள்ளனர்.

தற்போது கொண்டுவந்துள்ள பயிற்சி முறை மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து பயில இயலும். காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பேச்சுப் பயிற்சி மதுரை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் ஒரு பிரிவாகச் சிறப்பாகச் செயல்பட உள்ளது. இதன் மூலம் காது கேளாத குழந்தைகளுக்கு அனைத்து சிறப்புப் பரிசோதனைகள், சிறப்பு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை, சிறப்புப் பேச்சுப் பயிற்சி ஆகிய அனைத்தையும் வழங்கி அரசு மருந்துவமனை ஓர் ஒருங்கிணைந்த காக்ளியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மையமாக செயல்பட உள்ளது'' எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காது , மூக்கு , தொண்டை பிரிவு மருத்துவர்கள், தினகரன், ராஜகணேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment