FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, June 3, 2018

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

02.06.2018, தஞ்சாவூர்
தஞ்சை மேம்பாலம் மருத்துவகல்லூரி சாலையில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முன்பருவப்பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை இருபாலர்களுக்கும் உண்டு, உறைவிடப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் அரசு வழங்கும் அனைத்து கற்றல் உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு சிறப்பாசிரியர்களை கொண்டு சீரியமுறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த பள்ளிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியை, பார்வைத்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். செவித்திறன் மற்றும் வாய்பேச முடியாத மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர் என்ற முகவரியிலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362-236791 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment