FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 7, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக உதயமாகிறது 'வானவில்'

02.09.2018 கோவை:ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில், பத்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம், வானவில் என்ற பெயரில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கடந்தாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, ஆரம்பகட்ட பயிற்சி மையம், அனைத்து வட்டாரங்களிலும் துவங்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் செயல்படும் மையத்தில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின், குறைபாடுகள் கண்டறியப்பட்டு, துவக்க நிலையில் கிசிச்சை அளிக்கப்படுகிறது.கோயமுத்துார் சாய் சிட்டி ரோட்டரி கிளப், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இம்மையத்தை அதிநவீன வசதிகள் அடங்கிய மையமாக மாற்றியுள்ளது. தேவையான பயிற்சி உபகரணங்களுடன், சுவர்பூச்சு, வண்ண ஓவியங்கள், கழிவறைகள், காத்திருப்பு அறை, படிப்பகம் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இம்மையத்தின் திறப்பு விழா, இன்று காலை நடக்கிறது. இம்மையத்தில், 15 குழந்தைகள் அடிப்படை பயிற்சி பெறுவதாக, பிசியோதெரபிஸ்ட் மதனகோபால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment