FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 11, 2019

குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்

08.02.2019
கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் 2 வயது மகள் நித்யா. இந்தக் குழந்தைக்கு பிறவியில் இருந்தே காது கேட்காது. ராஜேஷ், தினக் கூலி. பெற்றோருக்கு, தங்கள் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்க ஆசையில்லாமல் இருக்குமா. குழந்தை நித்யாவுக்கு பேச்சு வரவழைக்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுவருகின்றனர். கடனை வாங்கி குழந்தைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள காது கேட்புக் கருவியை கஷ்டப்பட்டு வாங்கினர். அதுவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்தான் வாங்கியுள்ளனர். கருவியை மாட்டிய பிறகு குழந்தை நித்யாவுக்கு ஓரளவுக்கு பேச்சு கேட்கத் தொடங்கியது. குழந்தை தட்டித் தடுமாறி பேசவும் செய்தது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கண்ணூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்னை ரயிலில் தாயாருடன் நித்யா சென்றபோது, திருடர்கள் குழந்தையின் காது கேட்புக் கருவியை திருடிச் சென்றுவிட்டனர். மகளுக்காக கஷ்டப்பட்டு வாங்கிய கருவியும் திருடு போனதால், பெற்றோர் நொந்துபோனார்கள். தங்கள் மகளுக்கு மீண்டும் காது கேட்காமல் போனதைக் கண்டு கடும் வேதனை அடைந்துள்ளனர். 

ரயில்வே போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மதிப்புமிக்க பொருள் எனக் கருதி திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம். இந்தப் பொருளால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு அதை வீசி விடவோ அல்லது விற்று விடவோ முயல்வார்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தக் கருவியை கண்டெடுத்தால், 9847746711 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment