FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, May 14, 2019

17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியபக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

10.05.2019, மும்பை, 

மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டு வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மாற்றுத்திறனாளி சிறுமி

மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த 17 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென வாந்தி எடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து சிறுமியை அவளது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்தார். அங்கு அவளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது தாய் சைகை மூலம் அவளிடம் கேட்ட போது, அவளை பக்கத்து வீட்டை சேர்ந்த 25 வயது வாலிபர் கற்பழித்து இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டு ஜெயில்

இதுபற்றி சிறுமியின் தாய் கோவண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளியான சிறுமியின் பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment