FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, June 23, 2019

பிறவிலேயே காதுகேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’’ அறுவை சிகிச்சை


விழுப்புரம், ஜூன் 22–
பிறவிலேயே காது கேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதி நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . காது , மூக்கு, தொண்டைபிரிவு துறை தலைவர் இளஞ்செழியன் வரவேற்றார் . பிறவிலேயே காது கேட்காமல், பேச்சுத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும் குழந்தைளுக்கு கேட்கும், பேசும் திறன் மேம்படுத்தும், அதிநவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி கட்டளையின் இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் , மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி இஎன்டி பிரிவு இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த அறுவை சிகிச்சையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து, அறுவை சிகிச்சை பற்றிய டாக்டரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட இணை இயக்குனர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுச்சாமி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி இஎன்டி பிரிவு துறை தலைவர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேல், சவுந்திரராஜன், துறை டாக்டர்கள் ரவிக்குமார், விஜயபாபு, ஸ்ரீராம், நிஷாத், சையது அபுதாஹீர் , நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம் , ஆனந்த ஜோதி மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரியும் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment