FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, July 11, 2020

ரூ.35,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்த பரிதாப வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தாய்

10.07.2020
மயிலாடுதுறை; சீர்காழி அருகே, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மகளின் திருமணத்திற்காக மண்ணில் புதைத்து வைத்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 52; மனைவி உஷா, 52. இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர்களது மகள் திருமணத்திற்காக, உஷா பல ஆண்டுகளாக, பணத்தை சேமித்துள்ளார்.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளாக, 35 ஆயிரத்து, 500 ரூபாயை சேமித்து, வீட்டிலேயே மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தற்போது, வீடு சீரமைக்கும் பணியின் போது, வேலையாட்கள் பணத்தை எடுத்து கொடுத்த பின்னரே, குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.உஷா மாற்றுத்திறனாளி என்பதால், பணம் தடை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அறியாமலே இருந்துஉள்ளார். எனவே, 35 ஆயிரம் ரூபாயை மாற்றித்தர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment