FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 5, 2021

கொரோனா தொற்று குறித்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காதுகேளாத மாற்றுத்திறனாளி

திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவர் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆவார். கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை அச்சடித்து ஓசூரில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து இந்திய எல்லையான லடாக் பகுதி வரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார்சைக்கிளில் சென்று அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் கடந்த 15-ந் தேதி திருப்பத்தூருக்கு வந்து சேர்ந்தார்.

அவரை நேற்று முன்தினம் கலெக்டர் சிவன்அருள் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்ட காது கேளாதோர் சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.



No comments:

Post a Comment