FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, December 15, 2024

நெருங்கிய உறவு திருமணம்: குழந்தைக்குசெவித்திறன் பாதிக்க வாய்ப்பு: டாக்டர் மோகன் காமேஸ்வரன்

நெருங்கிய உறவில் திருமணம் பரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு



10.12.2024 
சென்னை: நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்குதொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் 'குட் டீட்' எனப்படும் தன்னார்வ அமைப்பு, காது கேளாத 18 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு, 30 செவித்திறன் கருவிகள் சென்னையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், பேச்சுப் பயிற்சிகளை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையம் வழங்கியது. குழந்தைகளுக்கு செவித்திறன் கருவிகளை பொருத்திய டாக்டர் மோகன் காமேஸ்வரன், நிகழ்வில் பேசியது:

உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காது கேட்காமல் இருந்தால் பேச்சுத்திறனை இழக்க நேரிடும். அறிவு வளர்ச்சி குறைந்துவிடும். செவித்திறன் இல்லாத ஒரே காரணத்தால் அப்துல் கலாம் போன்று உருவெடுக்க வேண்டிய பல குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் இந்திரா மோகன் காமேஸ்வரன், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment