FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, March 29, 2025

மாற்றுத்திறன் சிறாா்களுக்கான கல்விச் சுற்றுலா: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்


27.03.2025 
காஞ்சிபுரத்தில் செவித்திறன் குறைபாடுடைய சிறாா்களுக்கான கல்விச் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்து சிறுவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனா். நிகழாண்டு 0 முதல் 6 வயதுடைய ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறைபாடுடைய 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவா்களது பெற்றோரின் துணையுடன் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்ப அழைத்து வரப்பட உள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய கல்விச் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது அவா் சிறாா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.




No comments:

Post a Comment