FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 4, 2025

ஆகஸ்ட் இறுதி வரை மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி




03.06.2025
மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி, சமூக மறுவாழ்வு பணியாளா்கள் மற்றும் சமூக வழி நடத்துநா் மூலம் ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகளை கணக்கெடுக்க வருபவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை இல்லாதவா்கள் என அனைவரும் தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 94999 33471, 86674 80186 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment