FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, August 27, 2025

உ.பி.யில் அவலம்: கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் தற்கொலை



21.08.2025 
காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் மாவட்டத்தில் 23 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 18-ந்தேதி கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது.

இதில் பலத்த பாதிப்படைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை நிறைவடைந்து அவர் நேற்றிரவு ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவர், லோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில், வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி டி.சி.பி. சுரேந்திர நாத் திவாரி கூறும்போது. கம்பளி விற்கும் நபரின் மகளான அவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தை புகார் தெரிவித்து உள்ளார். இதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ச்சியாக ரோகித் (வயது 23) மற்றும் போலா (வயது 45) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய 3-வது குற்றவாளியை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லோனி காவல் நிலையத்திற்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு ஆர்வலர்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அவர்களிடம் உறுதியளித்தனர்.

கடந்த 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், மாமா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார்.

அப்போது, இரவில் அவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது. அதற்கடுத்த 4 நாட்களில் நடந்த இந்த சம்பவத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




No comments:

Post a Comment