FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, April 2, 2014

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

02.04.2014
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக இந்த நிலையத்தின் உதவி இயக்குநர் என்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிண்டியில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருள்களான பாக்கு மட்டைத் தட்டுகள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், துரித உணவுப் பொருள்களான பானிபூரி, பழச்சாறுகள், வற்றல் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியில் சேர கல்வி தடையில்லை. 18 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் சேரலாம்.

மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் போது தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பற்றிய வழி முறைகள் ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940318891, 9790754446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment