FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, August 20, 2014

வங்கியை முற்றுகையிட முயற்சி: 50 மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை,  19 August 2014
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கும் ராஜீவ் காந்தி தேசியக் கல்வி உதவித்தொகையை விடுவிக்க மறுத்ததோடு, மாணவர்களை அலைக்கழித்ததாக திருவல்லிக்கேணி கனரா வங்கி கிளை மீது புகார் எழுந்தது.

வங்கி நிர்வாகிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு மாற்றித்திறனாளிகள் சம்மேளனம் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி உதவித்தொகைகள் உள்ளிட்ட பிற உதவித்தொகைகளை விடுவிக்க, வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது, வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்றுவரும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர், வங்கி வட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

சமூகநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment