FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, August 21, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பகங்கள்

20.08.2014,
தமிழகத்தில் இந்த ஆண்டில் 1 லட்சத்து 5,829 மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 81ஆயிரத்து 586 பேர் உறுப்பு நலம் குன்றியவர்கள். 12 ஆயிரத்து 539 பேர் பார்வைத்திறன் இழந்தவர்கள். 11 ஆயிரத்து 704 பேர் செவித்திறன் குறைந்தவர்கள்.

இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் ஒன்று சென்னையில், கிண்டியில் செயல்பட்டு வருகின்றது.

அந்த வேலைவாய்ப்பகத்தின் கிளைகள் தமிழகத்தின் மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், உதகமண்டலம், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 13 இடங்களில் செயல்படுகின்றன.

இவை மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்தம் செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்விற்காக முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

No comments:

Post a Comment