FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, September 15, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலைத் தேர்வுக்கு பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகும். நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் தேர்ச்சிப் பெற மூன்று வகையான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குடிமைப் பணித் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. விடுதியில் தங்கி முழுநேரமும் பயிற்சி பெறுவோருக்கென 225 இடங்களும், மாலை நேரம் மட்டும் பயிற்சி பெறுவோருக்காக 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

நுழைவுத் தேர்வு: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்போரைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பயிற்சி நிலையத்தின் தலைவர் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது ஜாதி, வயது, பட்டப் படிப்பு சான்றுகளின் நகல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான உரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்த அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

சென்னை, கடலூர், கோவை, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

பாடத் திட்ட விவரம்: கொள்குறி வகைகளில் கேள்விகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய - உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு-நிர்வாக முறை உள்ளிட்ட பல்வேறுப் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான சீட்டுகள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) பதிவேற்றம் செய்யப்படும். மேலும், விவரங்களைப் பெற 044-2462 1475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment