FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, September 26, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் மாற்றுத்திறன் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் (இடமிருந்து) அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அரிமா மாவட்ட கவர்னர் கே.எஸ்.கண்ணன், தொழிலதிபர் எச்.வசந்தகுமார். (வலது) அணிவகுப்பில் பங்கேற்ற மாற்றுத்திறன் வீரர்கள்.
சென்னை, 25 September 2014,
மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கின.

இந்தப் போட்டிகளை தொழிலதிபர் எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன் கூறியது:

சர்வதேச அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அரிமா மாவட்டம் 324ஏ5, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை நடைபெறும்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளின் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சிவந்தி ஆதித்தனார் நினைவுச் சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment