FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, April 6, 2015

"இந்தியக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 0.56% மட்டுமே'

05.04.2015, புது தில்லி
நாட்டில் உள்ள 150 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் 15.21 லட்சம் மாணவர்களில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8,449 பேர் அதாவது 0.56 சதவீதம் பேர் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் ஜாவேத் அபிதி தெரிவித்ததாவது:

மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் கேட்டு, 200 கல்வி நிலையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவற்றில் 16 ஐஐடிகள், 13 ஐஐஎம்கள் உள்பட 150 கல்வி நிலையங்கள் மட்டுமே பதிலளித்தன.

அந்தக் கல்வி நிலையங்களில் படிக்கும் 15,21,438 மாணவர்களில், வெறும் 8,449 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் என்று தெரிய வந்தது.

இது மொத்தம் உள்ள மாணவர்களில் 0.56 சதவீதம் மட்டுமே ஆகும்.

மாற்றுத் திறனாளி மாணவர்களில், எலும்பு முறிவுக் குறைபாடுள்ளவர்கள் 46.67 சதவீதமும், கண் பார்வை பாதிப்படைந்தவர்கள் 32.13 சதவீதமும், பேச்சு / செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 5.16 சதவீதமும், பிற குறைபாடுள்ளவர்கள் 16.05 சதவீதமும் அடங்குவர்.

1995ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில், வெறும் 0.5 சதவீதம் மட்டுமே உண்மையில் அமலாகிறது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏன் செல்வதில்லை? கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும், அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

இந்த ஆய்வை அரசு கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று ஜாவேத் அபிதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 0.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment